கல்முனை மேயரின் உடனடி கவனத்திற்கு!!!!!

சாய்ந்தமருது 14 ம் குறிச்சி அஹ்மத் வீதியில் இன்று காலை 11 மணியளவில் குப்பை சேகரிப்பதற்கு குப்பை மெசின் வந்ததும் அவ் வீதியில் உள்ள பொது மக்கள் தங்களது வீட்டு குப்பைகளை வழமை போன்று வீதியில் வைத்துள்ளனர்.
குப்பை ஏற்ற வந்தவர்கள் இக் குப்பைகளை கண்டும் இவற்றை ஏற்றி செல்லாமல் வீதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர்
தற்போதைய நிலைமையை கௌரவ மேயர் மற்றும் சாய்ந்தமருது மாநகர உறுப்பினர்களின் கவனத்திற்கு படம் பிடித்து காட்டுகின்றோம். இப்படங்களை பார்த்தாவது உடனடியாக நாளை இக்குப்பைகளை இவ் வீதியில் இருந்து அகற்றுமாறு பொது மக்களாகிய நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்.இது உங்களின் உடனடி கவனத்திக்காக.






